பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அதன் தேசியத் தலைவர் குமாரி மாயாவதி அவர்கள் வழிகாட்டுதலின் கீழ் இந்தியாவின் முக்கிய தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது, நான்கு முறையாக உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர், இது நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். சுமார் 170 மில்லியன் மக்கள். குமாரி மாயாவதி அவர்கள் , அவரது எளிமையான மற்றும் எளிமையான தோற்றம் காரணமாக , அவரது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அதிகாரிகள் அனைவராலும் சகோதரி அல்லது பஹேன்ஜி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .
இந்திய நாடாளுமன்றத்தின் பலத்தைப் பொறுத்த வரையில், இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான லோக்சபா மற்றும் மேலவையான ராஜ்யசபாவில் கணிசமான எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கட்சி , எதிர்கட்சி இவர்களின் அதிகார பலம், பண பலம், ஊழல் , பிரித்தாளும் சூழ்ச்சி இவற்றை எல்லாம் கடந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி விளங்குகிறது . இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதத்தின்படி பிஎஸ்பி 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பெற்ற மொத்தம் 2.07 கோடிகளில் (207,65,229—–5.33 சதவீதம்) உத்தரப் பிரதேசத்திலேயே அந்தத் தேர்தலில் 1 கோடியே 31 லட்சம் (13.1 மில்லியன்) வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிகளை தவிர, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பிஎஸ்பி ஒரு மாற்று அரசியல் கட்சியாக வேகமாக வளர்ந்து வருகிறது. கட்சித் தலைவர் குமாரி மாயாவதி ஜி, இரும்புப் பெண்மணியாக தலைவராகவும் அடையாளம் காணப்படுகிறார் , சமூகத்தின் பல்வேறு மற்றும் பரந்த பிரிவினருக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் பெண்மணியாக உருவெடுத்துள்ளார், குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்திலும் , தேசிய அளவிலும் .
"பகுஜன் சமாஜ்" (பிற்படுத்தப்பட்டோர் ,பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) மற்றும் சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய "சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலை" என்ற மிஷனரி நோக்கம் மற்றும் நேசத்துக்குரிய இலக்கில் அர்ப்பணிப்பு மற்றும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் . பௌத்தர்கள், மத சிறுபான்மையினரின் பார்சிகள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவைச் சேர்ந்த ஏழைகள் குமாரி மாயாவதி ஜி செயல்படுகிறார் அவர்களை , இந்திய அரசியலில் மரியாதையுடனும், பிரமிப்புடனும் இந்திய அரசியலில் கருதுகின்றனர் .
பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்தவரை அதனுடன் கூட்டணி வைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வத்துடன் உள்ள போதிலும் ,தனித்து நின்று , கொள்கை சமரசம் செய்து கொள்ளாமல் மக்களுக்கான சேவைகளை செய்து வருகிறது . கட்சியின் தேர்தல் சின்னமான "யானை" அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கிறது, மேலும் பிஎஸ்பியின் "நீல" கொடி குமாரி மாயாவதி ஜியின் வலுவான மற்றும் உயர்ந்த தலைமையின் கீழ் பறக்கிறது, மாயாவதி அவர்கள் சாமானிய மக்களை ஆட்சியாளராக ஆக்க கடும் வைராக்கியத்துடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்.
1977-ல் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ் நாராயண், பட்டியலினச் சமூகத்தினரைப் பற்றிப் பேசும்போது ‘ஹரிஜன்’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தியது அக்கூட்டத்தில் பங்கேற்ற ஓர் இளம்பெண்ணைக் கோபம் கொள்ளச் செய்தது.
அவருக்குப் பின்னர் மேடையேறிய அப்பெண், “அம்பேத்கர் ஒரு முறைகூட உச்சரிக்காத அந்த வார்த்தையை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்? அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலினத்தவர்கள் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது?” என்று ராஜ் நாராயணைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது மேடையில் இருந்த கான்ஷிராம், அந்தப் பெண்ணின் துணிச்சலையும் அரசியல் அறிவையும் கண்டு வியந்துபோனார். அந்த இளம்பெண் - மாயாவதி.
இளங்கலைப் பட்டப் படிப்புக்குப் பின்னர் எல்எல்பி படித்து, பிறகு பி.எட் முடித்துவிட்டு டெல்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்த மாயாவதி, ஐஏஎஸ் தேர்வுக்காகவும் தயாராகிவந்தார். “நீ அரசு நிர்வாகத்தில் அங்கம் வகித்தால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் இடத்தில் இருப்பாய்” என்று உத்வேகம் தந்து அரசியல் பாதையில் மாயாவதிக்கு வழிகாட்டியவர் கான்ஷிராம். வீடு தேடி வந்து அரசியல் பயணத்துக்கு அழைத்த கன்ஷிராமின் வார்த்தைகளால் உந்தப்பட்ட மாயாவதி, தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறித்தான் அரசியல் பிரவேசம் செய்தார். மாயாவதி மட்டுமல்ல, ஏழைகள், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களைத் தேடிச் சென்று உதவுவது, அரசியல் பாதைக்கு வழிகாட்டுவது என இயங்கியவர் கான்ஷிராம்.
பெரிய தலைவர்கள் எனும் பிம்பத்துடன் இருப்பவர்கள், நேரில் வந்து சந்திக்குமாறு அழைப்புவிடுத்தால் செல்ல மறுத்த அவர், ஏழைகளின் வீடு தேடிச் சென்று உதவுவார். சமூக அரசியல் செயல்பாட்டில் தன்னைக் கரைத்துக்கொண்ட கான்ஷிராம், தனது குடும்பத்தைவிடவும் சமூக விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தனது சொந்தக் குடும்பத்தைத் தியாகம் செய்வதாகவே அறிவித்தார். தனது சகோதரி மரணமடைந்தபோதுகூட இறுதிநிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்க அவரால் முடியவில்லை. இன்னொரு சகோதரியின் திருமண நிகழ்வுக்கும்கூட அவர் செல்லவில்லை.
அதுமட்டுமல்ல, திருமணம் செய்யப்போவதில்லை என்றும் வங்கிக் கணக்கு வைத்திருக்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். எல்லாவற்றையும்விட, தனது தந்தை காலமானபோது, பக்கத்து கிராமத்தில்தான் அவர் இருந்தார். தனது தாய் அழைத்தும் தந்தையின் இறுதிச் சடங்கில் அவர் கலந்துகொள்ளவில்லை.
பாஜக மிகப் பெரிய ஊழல் கட்சி என்றும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளும் பாஜகவுக்கு இணையான ஊழல் கட்சிகள் என்றும் விமர்சித்த கான்ஷிராம், பட்டியலினச் சமூகத்தினர் பிற கட்சிகளைச் சார்ந்திருக்காமல் வலுவான அரசியல் சக்தியாகத் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியவர். பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜகஜீவன் ராம், ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்கள் பிற கட்சிகளை சார்ந்து இயங்கியதை விமர்சித்தார்.
“எனது மறைவுக்குப் பின்னரும் எனது பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போதே அந்தப் பொறுப்பை மாயாவதிக்கு வழங்குகிறேன்” என்று 2001-ல் பொதுமேடையில் கான்ஷிராம் அறிவித்தார். “கான்ஷிராம் எனக்கு அளித்த பொறுப்பை நான் நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்வேன்” என்று மாயாவதியும் உறுதியளித்தார். தனது லட்சியம் நிறைவேறும் என்ற கனவுடன் 2006-ல் கான்ஷிராம் மறைந்தார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தற்போதைய தலைவராக ஆற்றல் மிகு சமத்துவ தலைவர் திரு கே. ஆம்ஸ்ட்ராங் உள்ளார். அவரது தந்தை தீவிர பெரியாரிய ,திராவிடர் கழக ஆதரவாளர் மற்றும் பகுத்தறிவு பற்றாளர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற பேர் அவா காரணமாக திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சட்ட கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் அவர்கள் , கடந்த 2000ம் ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அயராத மக்கள் பணி, எளிய மக்கள் மீதான அக்கறை , பிற்படுத்தபட்ட , மிகவும் பிறப்படுத்த பட்ட மக்களின் வாழ்க்கை , கல்வி முன்னேற்றத்திற்கான அவரது தொடர் போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக 2006 ஆம் ஆண்டு தனித்து நின்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார் . 2007 ஆம் ஆண்டு கட்சியின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை மாமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட காலத்தில் பல்வேறு மக்கள் நல்வாழ்வு பணிகளை செய்தார். குறிப்பாக அவரது தலைமையில் நடந்த போராட்டத்தின் காரணமாக , போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி , சரியான ஊதியம் , பணியிட பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுமார் 2500 கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியராக அங்கீகரிக்க பட்டனர் . எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் சுய மரியாதையை மீட்டு கொடுத்தார் . 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆம்ஸ்ட்ராங் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு ஆளும் கட்சியின் அடக்குமுறை , எதிர்க்கட்சியின் வன்முறைகளையும் மீறி கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் . நீட் தேர்வு ரத்து , சமய சுதந்திரம் , சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் , பிற்படுத்த பட்ட மக்களின் வேலை வாய்ப்பு , கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆளும் அரசு செயல்பட வேண்டிய திசையை தீர்மானிக்கிறார் , அரசாங்கத்தில் தலித்துகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
நூற்றாண்டு காலமாக ஆளும் தமிழக கட்சிகள் , அவர்களின் மக்கள் விரோத போக்கு , ஊழல் , வன்முறை ஆகிய அனைத்திற்கும் எதிராக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன் , பிற்படுத்த பட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட மக்களின் இட ஒதுக்கீடு , பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு , அனைத்து மக்களின் கல்வி , வறுமை ஒழிப்பு , பெண்கள் மேம்பாடு , இளைஞர் நலன் ஆகிய அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்திய அரசமைப்பு சட்டத்தை முழுமையாக , சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவை வல்லரசாக்க முடியும் என உறுதியாக நம்பும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அரசமைப்பு சட்டத்தை அமல் படுத்த வழியாக இருக்கும் ஆட்சி அதிகாரத்தை அடைவதை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருவதன் காரணமாக , BSP இல் வளர்ந்து வரும் நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.